Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 43 வயது பெண், 62 வயது ஆண் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் கேரளா மாநிலம் மலப்புரத்துக்கு இவர்கள் சென்று வந்துள்ளனர். தற்போது மீண்டும் கேரளா செல்வதற்காக, தாங்களாகவே முன்வந்து கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக் கொண்டனர். அதில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி என முடிவு வந்துள்ளது.
இவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி, நோய் தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 142 ல் இருந்து 145 ஆக உயர்ந்தது. கோவை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் பட்டியலில் கோவையை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மத்திய அரசு மாற்றியது.
இந்நிலையில் நேற்று மீண்டும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கே திரும்புகிறது.